சங்க இலக்கியத்தில் இயற்பியல் துறைசார் கருத்தாக்கங்கள் (Physics Concepts in Sangam Literature)

Authors

  • Geethanjali T., Dr. Nallamuthu Gounder Mahalingam College, Pollachi-642 001 , Tamil Nadu, India

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.8

Keywords:

சங்க இலக்கியம், தொழில்நுட்பம், அறிவியல் கருத்துருக்கள், அறிவியல் அறிவு, உயா்நிலை சிந்தனைத்திறன்.

Abstract

அன்றாட வாழ்க்கையில் மனிதன் அனைத்து நிலைகளிலும்  அறிவியலைச் சார்ந்தே இருக்கிறான். அறிவியல் கருத்துக்களையும் அவை சார்ந்த கருவிகளையும் புறக்கணித்துவிட்டு இன்றைய உலகில் ஒரு மனிதன் வாழ்வது என்பது முடியாத காரியம் எனக் கூறலாம். சிறிய எழுதுகோல் முதற்கொண்டு தொழில் நுட்பமும்  நுணுக்கமும் பொருந்திய இன்றைய மின்னணுவியல் கருவிகள் வரை உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய  குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் பலவாறு கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்திறனாய்வு என்பது கற்பனை, வருணனை, அணிநயம், சொல்நயம்  என்னும் நிலைகளில் ஆராய்வது மட்டுமன்று. அறிவியல் செய்திகளையும் புலப்படுத்திக் காட்டவல்லது. இயற்பியல், வானியல் எனப் பல்வேறு துறைகளில் பண்டைய தமிழா்கள் வல்லுநா்களாகத் திகழ்ந்துள்ளனா் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில்  இக்கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரையின் வாயிலாக பழந்தமிழரின் அறிவியற் புலமை வெளிப்படும். புதிய ஆய்வுக் களங்களையும், புதிய சொற்களையும் பெற இயலும். இலக்கியங்களில் காணலாகும் அறிவியற் புதுமைகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலும்.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles

How to Cite

சங்க இலக்கியத்தில் இயற்பியல் துறைசார் கருத்தாக்கங்கள் (Physics Concepts in Sangam Literature). (2020). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 9(2), 75-81. https://doi.org/10.22452/JTP.vol9no2.8

Similar Articles

1-10 of 283

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)